Our Feeds


Saturday, September 17, 2022

SHAHNI RAMEES

இருபாலை அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்


 யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் மதியம் 2 மணியுடன் நிறுத்தப்பட்டது.


குறித்த வீட்டில் புலிகளின் புதையல்கள் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரசிய தகவலின் அடிப்படையில் புதையலை அகழ்வதற்கான அனுமதியினை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரி இருந்தனர்.


நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 2 மணி வரையிர் புதையல் அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


புதையல் அகழ்வதற்காக கொழும்பில் இருந்து விசேட அணியினர் வந்திருந்த நிலையில் , அகழ்வு பணிகளுக்காக கனரக வாகனங்களும் பயன்படுத்தப்பட்டது.


மதியம் 2 மணிவரையில் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற போதும், எவ்விதமான பொருட்களும் மீட்கப்படாத நிலையில் அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »