வெள்ளை வேன் செய்தியாளர் சந்திப்பு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில், தாங்கள் நிரபராதி என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் மொஹமட் ரூமி ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.