விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிதா அபேரத்னவை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (12) உத்தரவிட்டார்.
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் தமிதா அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.