Our Feeds


Thursday, October 13, 2022

SHAHNI RAMEES

வவுனியாவில் மின்னல் தாக்கி 11 மாடுகள் உயிரிழப்பு..!



வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக

11 மாடுகள் உயிரிழந்துள்ளன.

நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம்

மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மழை பெய்துள்ளது.

இதன்போது,  மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்ட பகுதியில் உள்ள மரத்தின் மீது இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு மாடுகளை தாக்கியமையால் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன.


இதேவேளை, வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 7 ஆம் திகதி இடி, மின்னல் தாக்கத்தினால் மாமடு பகுதியில் குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »