Our Feeds


Monday, October 10, 2022

ShortTalk

12,500 மெற்றிக் டன் உரம் எப்போது நாட்டை வந்தடையும்? - விவசாய அமைச்சர் பதில்.



உலக வங்கியின் ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்படுகின்ற 12 ஆயிரத்து 500 மெற்றிக் டன் உரம், எதிர்வரும் 10 நாட்களுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரத் தொகைக்கு மேலதிகமாக இந்த உரம் கொண்டு வரப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்போகத்துக்கு தேவையான ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையை விவசாய அமைச்சு முன்னதாக ஆரம்பித்தது.

இதன்படி, பெரும் போகத்துக்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக கோரப்பட்டிருந்த முதலாவது விலை மனு தோல்வியடைந்தமையை அடுத்து இரண்டாவது விலை மனுவுக்காக மூன்று நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

குறித்த நிறுவனங்கள் குறித்த விபரங்கள் அமைச்சரவை அனுமதிக்காக நாளைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »