Our Feeds


Thursday, October 13, 2022

SHAHNI RAMEES

13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!




நாட்டை அண்மித்த கடற்பகுதிகளில் குறைந்த வளிமண்டலத்

தாழ்வு நிலை நீடிப்பதால், 13 மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


எனவே, நிலவும் மழையுடனான வானிலை நாளை (14) பிற்பகல் 01.00 மணியுடன் முடிவடையுமெ தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த 24 மணித்தியாலங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதனால், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.


இந்த மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம், அதே சமயம் நாட்டின் மற்ற இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »