Our Feeds


Thursday, October 13, 2022

SHAHNI RAMEES

தாமதக் கட்டணமின்றி 950 கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை..!

 

கொழும்பு துறைமுகத்தில் நெரிசலை தடுக்கும் நடவடிக்கையாக, தாமதக் கட்டணமின்றி பல்வேறு பொருட்கள் உள்ளடங்கிய 950 கொள்கலன்களை விடுவிப்பதற்கு நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தீர்மானித்துள்ளார்.

கொழும்பு துறைமுகம் மற்றும் சுங்க அதிகாரிகளுடன் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இராஜாங்க அமைச்சர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இதனால், பல வருடங்களாக வைச்கப்பட்டுள்ள ஒரு மில்லியன் கிலோகிராம் அரிசியை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த அரிசி தொகையானது கொழும்பு துறைமுகத்தில் தாமதக் கட்டணம் செலுத்தாமல் 79 கொள்கலன்களில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »