Our Feeds


Wednesday, October 5, 2022

ShortTalk

தடைப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.



ரயில் ஒன்று தடம்புரண்டமையால், வடக்கு மார்க்கத்தில் ரயில் பாதையில் ஏற்பட்டிருந்த பாதிப்பு தற்போது சீராக்கப்பட்டுள்ளது.

சரக்குகளை ஏற்றிச்செல்லும் ரயில், வெல்லவ பகுதியில் நேற்றிரவு தடம்புரண்டது.

இதன்காரணமாக, காங்கேசன்துறை முதல் கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த ரயில் சேவை, மஹவ ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

அத்துடன், கொழும்பு – கோட்டையிலிருந்து வடக்கு நோக்கி பயணிகத்த ரயில் சேவை குருநாகல் வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வடக்கு ரயில் சேவை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »