ரயில் ஒன்று தடம்புரண்டமையால், வடக்கு மார்க்கத்தில் ரயில் பாதையில் ஏற்பட்டிருந்த பாதிப்பு தற்போது சீராக்கப்பட்டுள்ளது.
சரக்குகளை ஏற்றிச்செல்லும் ரயில், வெல்லவ பகுதியில் நேற்றிரவு தடம்புரண்டது.
இதன்காரணமாக, காங்கேசன்துறை முதல் கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த ரயில் சேவை, மஹவ ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், கொழும்பு – கோட்டையிலிருந்து வடக்கு நோக்கி பயணிகத்த ரயில் சேவை குருநாகல் வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வடக்கு ரயில் சேவை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது