Our Feeds


Thursday, October 6, 2022

SHAHNI RAMEES

முன்னாள் ஜனாதிபதியின் ரிட் மனுவை பரிசீலனை செய்ய தீர்மானம்..!



உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக

தகவல் கிடைத்ததும் அதனைத் தடுக்கத் தவறியமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கோட்டை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை வலுவிலக்கச் செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.


இந்த ரிட் மனுவை எதிர்வரும் 10ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.



மைத்ரிபால சிறிசேன சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »