Our Feeds


Tuesday, October 11, 2022

ShortTalk

திலினி பிரியமாலியின் காதலனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை!



கொழும்பில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்துவதாக கூறி பல்வேறு நபர்களை ஏமாற்றிய சந்தேக நபரான திலினி பிரியமாலி 2,510,500,500 ரூபாவை (ரூ. 251 கோடி) பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ள சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பெறப்பட்ட 251 கோடி ரூபா பணத்தை அவர் என்ன செய்தார் என்பதை அறிவதற்காக அவரது காதலனை, குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வரவழைத்து நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தனது காதலனை கணவர்போல் அறிமுகப்படுத்திக் கொண்டு அவருடன் கட்சிகள், நடிகர்கள் மற்றும் நடிகைகள் மற்றும் அரசியல்வாதிகளுடனான சந்திப்புகளுக்கு சென்றுள்ளமையும் தெரிய வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »