Our Feeds


Saturday, October 8, 2022

ShortNews

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் இம்ரான்கான் - விரைவில் கைது செய்யப்படலாம்.



பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் இம்ரான்கான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனவும், தற்போது அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்ரான் ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாக முறைப்பாடு எழுந்தது.

இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10இற்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் தொடங்கி வெளிநாட்டு நிதி பெற்றதாக கூறப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »