தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாறிவிட்டதால்
அவருக்கு உதவுகிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.தூதரகங்கள் சொல்வதை ரணில் விக்கிரமசிங்க கேட்பதில்லை என்றும் அதனால்தான் காலிமுகத்திடல் போராட்டத்தை இல்லாமல் செய்ய முடிந்ததாகவும் அவர் கூறினார்.
இன்றைய ரணில் விக்கிரமசிங்க மேற்குலக சார்புடையவர் அல்ல என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இன்று எங்கே என்று கேள்வி எழுப்பிய நாமல் ராஜபக்ஷ, தமிதா அபேரத்ன ஐக்கிய மக்கள் சக்தியின் மேடையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.