Our Feeds


Sunday, October 9, 2022

ShortTalk

வரிக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் - சஜித் பிரேமதாஸ.

நாட்டின் வருமானத்தைப் பெருக்கும் வகையில் வரிக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றும், அரசாக செலவழிக்கும் போது தேவையை இலக்காகக் கொண்டு செலவழிக்க வேண்டும் எனவும், அந்த இலக்குகளை எட்டும் விதமாக அது அமையப்பெற வேண்டும் என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறானதொரு நிலையில் எமது நாட்டுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதே புதிய பிரவேசமாக அமையும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (8) தெரிவித்தார்.


எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் எவ்வளவு அழுத்தங்களும் அசௌகரியங்களும் இருந்தாலும் அதை குறைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றாலும், இந்த அரசாங்கத்தில் சமூக பாதுகாப்பு திட்டமொன்று இல்லை எனவும், ராஜபக்ச குடும்பத்தை பாதுகாத்த வன்னம் அமைச்சுகளை பெருக்கிக் கொள்ளும் பாதுகாப்புத் திட்டமே அவர்களுக்கு உள்ளதாகவும், தற்போது 38 இராஜாங்க அமைச்சர்கள் உள்ளதாகவும் மேலும் பலர் நியமிக்கப்படவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டை வங்குரோத்தடையச் செய்த நாமல் ராஜபக்ச பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பேரவைக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு, நாட்டின் கொள்கை முன்னுரிமைகளை உருவாக்குவதற்குத் தேவையான குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது நகைப்புக்குரிய விடயம் என்றும், நாட்டை அழித்த ராஜபக்சவிடமிருந்து தீர்வுகள் காண வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்கள் மக்களை ஏமாற்றிய வன்னம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இது போன்ற அரசியல் மோசடிகளில் அங்கம் வகிக்க ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ தயாராக இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் யட்டிநுவர தேர்தல் தொகுதிக் கூட்டம் நேற்று (08) இடம் பெற்றது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் யட்டிநுவர தொகுதி அமைப்பாளர் கெமுனு அபயசுந்தர ஏற்பாடு செய்திருந்ததோடு, இதில் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »