Our Feeds


Sunday, October 16, 2022

ShortTalk

VIDEO: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தொடர்பில் பொதுஜன பெரமுன வெளியிட்ட தகவல்..!




புலனாய்வு பிரிவு தகவல்களுக்கு அமைய அரசுக்கு

எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்திற்கும் குறைவு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “இரு வாரங்களுக்கு முன்பாக புலனாய்வு பிரிவின் பிரதானி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆர்ப்பாட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டார். அதற்கமைய, புலனாய்வு பிரிவின் புள்ளிவிபரங்களுக்கு அமைய ஆர்ப்பாட்டத்தில் 2 இலட்சத்திற்கும் குறைவானவர்களே பங்கேற்றதாக தெரிவித்தார். அதற்கு பயந்தே எமது அரசு ஒரு காலை பின்வைத்தது. பயம் காரணமாக சிலர் சுயாதீனமாகினர். சுயாதீனமானவர்களின் பின்னால் இருப்பது பயம் அல்ல, சதி முயற்சியே”- என்றார்.


.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »