Our Feeds


Saturday, November 12, 2022

News Editor

சமூக ஊடகங்கள் தொடர்பில் 12,373 முறைப்பாடுகள்


 

இந்தாண்டு இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் தொடர்பில் 12,373 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவற்றுள் 41 சதவீதமானவை போலி முகப்புத்தக முறைப்பாடுகள் தொடர்பான கணக்குகள் தொடர்பானவை என அந்த பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளளார்.

கணக்குகள் முடக்கப்பட்டமை தொடர்பில் 16 சதவீதமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அத்துடன், ஸ்கேம் எனப்படும் மோசடி முறைமைத் தொடர்பில் 468 முறைப்பாடுகளும், துஷ்பிரயோகங்கள் குறித்து 757 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »