Our Feeds


Thursday, November 17, 2022

RilmiFaleel

14 இந்திய மீனவர்கள் கைது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை அருகே நேற்று(16) மாலை குறித்த இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பதின்நான்கு மீனவர்களையும் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பி்டத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »