Our Feeds


Tuesday, November 15, 2022

ShortTalk

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு இந்த வருடத்தில் மட்டும் 1800 முறைப்பாடுகள்...!





லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு

இந்த வருடத்தில் 1,800 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.


கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை, இந்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.


லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவ்வாறான 620 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.


இதற்கு மேலதிகமாக சொத்துக்கள் தொடர்பான ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் 64 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஆணைக்குழு, கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் சுமார் 50 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் நிறுவன மட்டத்தில் 72 அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதுடன், மேலும் 328 முறைப்பாடுகள் மேலதிக விசாரணைகளுக்காக ஏனைய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


மேற்படி முறைப்பாடுகளிலிருந்து லஞ்ச சட்டத்துடன் தொடர்பில்லாத 719 முறைப்பாடுகளின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »