Our Feeds


Monday, November 28, 2022

News Editor

5 மாதங்களுக்கு வடக்கிற்கான ரயில் சேவைகள் நிறுத்தம்


 

சேதடைந்துள்ள புகையிரத மார்க்கத்தை சீரமைக்கும் வரை ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவை நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் வைத்தியர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடேக்கலநாதன் இன்று (28) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »