Our Feeds


Friday, November 4, 2022

ShortTalk

மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கி.கி. கேரள கஞ்சாவை கைப்பற்றியது இலங்கை இராணுவம்.



யாழ்ப்பாணம், சேந்தான்குளம் கடற்கரையை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.


குறித்த பகுதியில் ஒரு தொகை கஞ்சா பொதிகள் காணப்படுவதாக இன்றையதினம் (04)  இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர், குறித்த கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.


இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா பொதியினை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இளவாலை பொலிசாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »