கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 6 மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் சரணடைந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துஷ்பிரயோகம் பல நாட்களாக இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர் நேற்று வெள்ளிக்கிழமை (4 ) காலை தனது மனைவியுடன் கெக்கிராவ பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.