Our Feeds


Thursday, November 10, 2022

News Editor

அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழப்பு


 

மாலைதீவின் தலைநகர் மாலேயில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட  தீவிபத்தில் மூச்சுத்திணறி மற்றும் உடல் கருகி 10 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 பேர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டடத்தில் இன்று அதிகாலை. கீழ்தளத்தில் உள்ள வாகன பழுது பார்க்கும் கடையில் முதலில் தீப்பிடித்த  பின்னர் தீ மளமளவென கட்டடத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

இதன்போது அந்த கட்டடத்தில் தங்கி இருந்தவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். தீப்பிடித்து புகைமூட்டம் நிலவுவதை அறிந்ததும் அலறியடித்தபடி எழுந்து வெளியே ஓடி வந்தபோதும், அவர்களால் கட்டடத்தின் மேல்தளத்தில் இருந்து வெளியேற முடியவில்லை. இதற்கிடையே தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் குறித்த  தீவிபத்தில் மூச்சுத்திணறி மற்றும் உடல் கருகி 10 பேர் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில்,  இந்தியாவைச் சேர்ந்த  9 பேரும். பங்காளாதேஷைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »