Our Feeds


Friday, November 11, 2022

RilmiFaleel

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்.

நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.1 புள்ளிகளாக பதிவானது.

நேபாள நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள டோட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் மலைப்பாங்கான பகுதிகளில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததில் இடுபாடிகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததோடு. மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த நிலநடுக்கத்தால் அந்த நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் இருக்கும் நிலையில் நேபாளத்தில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை..

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »