Our Feeds


Monday, November 7, 2022

ShortTalk

தேசியப்பட்டியலில் ஆதிவாசி பிரதிநிதியா?



தேசியப்பட்டியல் ஊடாக ஆதிவாசி பிரதிநிதியொருவர் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட வேண்டுமென வேடுவத் தலைவர் உருவரிகே வன்னியலத்தோ வலியுறுத்தியுள்ளார்.


பதுளை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 500,000 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் உள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினர் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளதாகவும், நேபாளத்தில் பழங்குடியினர் உயர் பதவிகளை வகித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தம்பானையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »