Our Feeds


Thursday, November 17, 2022

ShortTalk

திருச்சி – கொழும்பு இடையே புதிய விமான சேவை ஆரம்பம் - நேர அட்டவணையும் வெளியீடு



திருச்சி: குளிர்கால அட்டவணைக்கு பின்னர் திருச்சி – இலங்கை இடையே டிசம்பர் 8ஆம் திகதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்படவுள்ளது.


திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, டுபாய், சார்ஜா, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விமான போக்குவரத்துகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி – இலங்கை இடையே தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. என்றாலும் திருச்சியில் இருந்து இலங்கை வழியாக முபாய்க்கு, சென்று வரும் பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தினசரி ஏராளமான பயணிகள் டுபாய்க்கு சென்று வருகின்றனர். ஆனால் இயக்கப்படும் இரு விமானங்களில் போதியளவு இருக்கைகள் கிடைப்பதில்லை. எனவே திருச்சியில் இருந்து, சென்னை வழியாகவோ அல்லது இலங்கை சென்று அங்கிருந்து மாற்று விமானங்கள் மூலமாகவோ துபைக்கு சென்று வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு திருச்சி – இலங்கை இடையே ஃபிட்ஸ் ஏர் என்ற இந்த கூடுதல் விமான சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

டுபாய் செல்லும் பயணிகள் திருச்சியில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்து மாற்று விமானங்கள் மூலம்  பயணிக்கலாம். அதேபோல் டுபாயிலிருந்து திருச்சி செல்லும் பயணிகளும் இதே வழியில் திருச்சிக்கு செல்லமுடியும்

டிசம்பர் எட்டாம் திகதி முதல் தொடங்கப்படவுள்ள இந்த புதிய விமான சேவை, வாரத்தில் வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளது.

வியாழக்கிழமை காலை 10:25 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து புறப்படும் இந்த விமானம் 11:25க்கு திருச்சியை சென்றடைந்து. மீண்டும் அங்கிருந்து 12:25க்கு புறப்பட்டு 1:25க்கு இலங்கையை வந்தடையவுள்ளது.

அத்தோடு சனிக்கிழமை பகல் 12:45க்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு 1:45 க்கு திருச்சி சென்று மீண்டும் 2:45 க்கு அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 3:45க்கு கொழும்பை வந்தடையும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு கொழும்புவிலிருந்து புறப்படும் இந்த விமானம் 11 மணிக்கு திருச்சியை சென்றடைந்து, மீண்டும் 11:45க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 12:45க்கு  கொழும்புவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »