பஹ்ரெனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், பஹ்ரெய்ன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபாவை சந்தித்து கலந்துரையாடினார்.
பாப்பரசர் பிரான்சிஸ் 4 நாள் விஜயம் மேற்கொண்டுநேற்று வியாழக்கிழமை பிற்பகல் பஹ்ரெய்னை சென்றடைந்தார்.
மத்திய கிழக்கு நாடான பஹ்ரெய்னுக்கு பாப்பரசர் ஒருவர் விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும்.
ஷாகீர் றோயல் அரண்மனையில், கலந்துரையாடலுக்கான பஹ்ரெய்ன் மன்றத்தின் நிகழ்விலும் பாப்பரசர் இன்று பங்குபற்றினார்.
பஹ்ரெய்ன் மன்னர் ஹமத் பின் இஸா அல் கலீபா, முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீபா, எகிப்திய தலைநகர் கெய்ரோவின் அல் அஸ்ஹர் பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய கற்கை நிலையத்தின் இமாம் ஷேக் அஹம்த் அல் தாயீப் உட்பட பலர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக, சக்கரக்கதிரையை பாப்பரசர் பிரான்சிஸ் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.