Our Feeds


Thursday, November 10, 2022

News Editor

டயனாவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு


 

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி, அது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் இன்று (10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்ததன் பின்னரே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »