Our Feeds


Tuesday, November 15, 2022

ShortTalk

நாட்டில் பால் மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கூறும் பால் மா இறக்குமதியாளர்கள்!



இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் செயற்பாட்டின் காரணமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 15 பால் மா கொள்கலன்களை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.


இதன் காரணமாக எதிர்காலத்தில் பால் மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதன் தலைவர் லக்க்ஷமன் வீரசூரிய கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருந்து எங்களுக்கு பால் மா பவுடரை   விநியோகிக்கும் முகவர்கள்  இந்தப் பால் மாவை  வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவுக்கு மீண்டும் அனுப்புமாறு கூறுகிறார்கள்.  அவ்வாறு நாம் செய்தால்  நாட்டில் பால்  மா பற்றாக்குறை ஏற்படும் என்றும்  அவர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »