Our Feeds


Friday, November 11, 2022

News Editor

தனுஸ்கவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மேலுமொரு இலங்கை வீரர்


 

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனுஸ்க குணதிலக்கவை தொடர்ந்து தற்போது தசுன் சானக்க தொடர்பிலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி, சுப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது.

இந்நிலையில், அங்கு கிரிக்கட் விளையாட சென்றிருந்த தசுன் சானக்க, காணி வர்த்தக நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அங்கு கிரிக்கட் விளையாட சென்றிருந்த விளையாடுவதற்காக சென்றவர் இவ்வாறு காணி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக்க தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் வைத்தே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »