மிக விரைவில் அரசாங்கத்துடன் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரபல தலைவர் ஒருவர் தயாராகவுள்ளதாகவும் முன்னைய பல அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்த சிரேஷ்ட அரசியல்வாதி அவர் என்றும் அக்கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.
இந்த விடயம் கட்சியின் தலைவர்களுக்கும் தெரியும் என்று தெரிவிக்கும் அந்த வட்டாரங்கள், அரசாங்கத்தை வெற்றியடையச் செய்வதற்கான அனைத்து ஒருங்கிணைப்பையும் அரசியல்வாதியின் மகன் செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றன.
கட்சியை அரசாங்கத்துடன் இணைக்க வேண்டும் என, இந்த முன்னாள் அமைச்சர் நீண்டகாலமாக தனது கருத்தை தெரிவித்து வருகின்றார் என்றும் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டங்களில் கூட அவர் இந்த விடயத்தை கடுமையாகச் சுட்டிக்காட்டியதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.