Our Feeds


Friday, November 11, 2022

News Editor

மதுபான விற்பனை குறித்து லங்கா சதொசவின் கோரிக்கை


 

லங்கா சதொசவுக்கு சொந்தமான மேலும் பல விற்பனை நிலையங்களில் மதுபான விற்பனையை மேற்கொள்வதற்காக அனுமதிப்பத்திரங்களை கோரியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியாக இதுவரையில் 27 சதொச விற்பனை நிலையங்களில் மதுபான விற்பனை இடம்பெற்று வருவதாகவும் மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், லங்கா சதொசவின் கோரிக்கையை தற்போது பரிசீலித்து வருவதாக மதுவரித் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »