Our Feeds


Sunday, November 20, 2022

RilmiFaleel

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா – தலைநகருக்கு பூட்டு.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்றின் புதிய அலை எழுந்துள்ளதால், அங்குள்ள வணிகவளாகங்கள் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

சீனாவின் உஹான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவியது. இந்தியா, இலங்கை  உள்ளிட்ட பல நாடுகளில் இந்த தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவில் அவ்வப்போது பல நகரங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவுகிறது.

இந்நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலும் புதிய அலை எழுந்துள்ளதால், வணிகவளாகங்கள் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

சீனாவில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெய்ஜிங்கில் மாத்திரம் 515 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பெய்ஜிங் நகரில் அவசியம் இல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »