Our Feeds


Saturday, November 5, 2022

ShortTalk

T 20 இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து.



T20 உலக்கிண்ண  தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி  4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.


இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 141 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸங்க அதிகபட்சமாக 67 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அத்தோடு பந்து வீச்சில் மார்க் வுட் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதையடுத்து 142 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 74 ஓட்டங்களை குவித்தது. இதனால் 15 ஓவரில் ஆட்டம் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 75 ஓட்டங்களின் போது முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி 111 ஓட்டங்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதனையடுத்து ஸ்டொக்ஸ் – சேம் கரன் ஜோடி நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். சேம் கரன் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன்போது 12 பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுக்க வேண்டியது நிலையில் கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தன.

கடைசி ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 44 ஓட்டங்களை எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் அவுஸ்திரேலியா அணி உலககோப்பையில் இருந்து வெளியேறியது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »