Our Feeds


Friday, December 2, 2022

ShortNews

15 வயதான மாணவி பாலியல் துஷ்பிரயோகம் : ஹொரணை பாடசாலை ஆசிரியர் கைது!



15 வயதான  மாணவி ஒருவரின் வீட்டுக்குச் சென்று அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் ஹொரணை பிரதேசத்தில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட  பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, இம்மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதிவான் நளினா இம்புலாகொட உத்தரவிட்டார்.

ஹொரணை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய ஆசிரியர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »