Our Feeds


Thursday, December 29, 2022

ShortNews

அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 15 வயதான கர்ப்பிணி மாணவி கடத்தல் : இளைஞர் கைது!



நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் அதிகார சபையின் கண்காணிப்பில் அநுராதபுரம் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 15 வயதுடைய கர்ப்பிணி மாணவியை கடத்திச் சென்ற சந்தேகத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.


கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் அதிகார சபையின் பொறுப்பில் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சந்தேக நபரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.  

குறித்த மாணவி  தற்காலிக விடுதி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர்  தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள நண்பரின் வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்றபோதே சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »