Our Feeds


Monday, December 19, 2022

News Editor

இலங்கை மாணவர்களுக்கு 70 சதவீத சீருடை துணிகளை நன்கொடையாக வழங்கும் சீனா





இலங்கையிலுள்ள மில்லியன் கணக்கான மாணவர்களின் 70 சதவீத சீருடைக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சீனா சீருடை துணிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

அதற்கமைய இந்த நன்கொடையின் முதலாவது தொகுதியாக 3 மில்லியன் மீற்றர் 38 ஆயிரம் பெட்டிகளில் பொதியிடப்பட்டு , 20 கொல்கலன்களில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளில் 70 சதவீதமான வெட்டிய துணிகளை வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மிகுதி 30 சதவீத துணிகளை பெற்றுக்கொள்வதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளத

2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »