Our Feeds


Sunday, December 25, 2022

ShortNews

மின் கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை




(எம்.மனோசித்ரா)


மின்சார கட்டணத்தை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரஜைகளுக்கு வாழ்வதற்கு காணப்படும் உரிமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளமையை கருத்தில்கொண்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றமை தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை உள்ளிட்ட துறையுடன் தொடர்புடைய முக்கிய அதிகாரிகளிடம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தேவைப்படும் பட்சத்தில் மின்சக்தி அமைச்சர், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடமும் விடயங்களை கேட்டறிய எதிர்பார்ப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »