Our Feeds


Monday, December 26, 2022

ShortNews

பிரத்தியேக வகுப்புக்கு சென்ற மாணவியை காணவில்லை - தாய் பொலிசில் முறைப்பாடு!




லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரியகொட பகுதியில் தரம் 10ல் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிச 25) காலை பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று வீடு திரும்பவில்லை என குறித்த மாணவியின் தாயாரினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரும் மாணவியின் உறவினர்களும் இணைந்து தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »