Our Feeds


Sunday, December 11, 2022

News Editor

பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல்


 

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் மாணவர்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அவரது மகனின் கார் மோதியதாக பல்கலைக்கழக மாணவர்கள் சிலருடன் நேற்று (10) இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் ஏற்பட்ட தகராறு நீண்டு சென்றதையடுத்து, அதுல சேனாரத்ன தங்கியிருந்த பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை சுமார் 300 பேர் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் பேராதனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மோதலை அடுத்து கூட்டத்தை கலைத்தனர்.

தாக்குதலில் காயமடைந்த அதுல சேனாரத்ன சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையிலும், அவரது மகன் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த தாக்குதலில் அதுல சேனாரத்னவின் மனைவி மற்றும் வீட்டில் இருந்த இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »