மாவனெல்ல-மாகெஹெல்வல-இஹலகோட்டே பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார்.
தாய்க்கும் தந்தைக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையின் போது 20 வயதான மகன் குறுக்கிட்டு 46 வயதான தந்தையை தாக்கியதால் இம்மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி த்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.