Our Feeds


Monday, December 12, 2022

News Editor

தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு


 

தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில்  ஞாயிற்றுக்கிழமை  (11) மாலை 4 மணி முதல் திங்கட்கிழமை (12) நள்ளிரவு 12 மணி வரை பல பிரச்சினைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனால் நுவரெலியா பிரதான தபால் அலுவலகம் மற்றும்  நானுஓயா தபால் அலுவலகங்கள் செயலிழந்து காணப்படுகின்றன.

எனினும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு  காரணமாக தபால் சேவை மற்றும் அலுவலக கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் , வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும்  ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »