இரத்மலானை மற்றும் கல்கிஸை பிரதேசங்களில் உள்ள உயர்தரப் பாடசாலைகளின் மாணவர்களை இலக்கு வைத்து மாவா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் விற்பனைக்கு தயார் செய்யப்பட்டிருந்த 7200 மில்லி கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதானவராவார். கொழும்பு பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மாவா போதைப்பொருட்களை பொதி செய்து பாடசாலைகளை இலக்கு வைத்து அவற்றை விற்பனை செய்தார் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பாடசாலைகளுக்கு அருகில் நடமாடும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் இவ்வாறானவர்கள் குறித்த தகவல்களை பொலிஸாருக்கு வழங்கி உதவுமாறும் பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.