Our Feeds


Thursday, December 29, 2022

SHAHNI RAMEES

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்...!





2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான

மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.


அனைத்து மாவட்டங்களிலும் வினாத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெற்று வருவதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி முடிவடைந்தது.


2022 புலமைப்பரிசில் பரீட்சை 2,894 நிலையங்களில் நடைபெற்றதுடன் 334,698 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.


2023 ஜனவரியில் பரீட்சை முடிவுகளை வெளியிட உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »