Our Feeds


Friday, December 16, 2022

SHAHNI RAMEES

அட்டுலுகம சிறுமி ஆயிஷா கொலை..! l சந்தேக நபருக்கு எதிராக சட்ட மாஅதிபர் எடுத்த அதிரடி நடவடிக்கை...!

 

பாணந்துறை – அட்டுலுகம பகுதியில் சேற்று நிலத்திற்குள் புதைத்து, மொஹமட் ஹக்ரம் பாதீமா ஆயிஷா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சட்ட மாஅதிபர், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

பாணந்துறை மேல் நீதிமன்றத்தில், சட்ட மாஅதிபர் இந்த குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாணந்துறை – பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கடந்த மே மாதம் 27ம் திகதி சிறுமியொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பகுதியிலுள்ள சேற்று நிலத்திற்குள் புதைத்து, இந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.

சேற்று நீர், நுரையீரலுக்குள் சென்றமையே, சிறுமி உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனையிலிருந்து தெரியவந்தது.

இந்த நிலையில், குறித்த பகுதியைச் சேர்ந்த பள்ளி குட்டி என அழைக்கப்படும் பாஃரூக் மொஹமட் என்ற சந்தேகநபர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எதிராக சட்ட மாஅதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.


குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது என கருதி, நீதவான் நீதிமன்றில் வழக்கை தாக்கல் செய்யாது, நேரடியாக மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபர் வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »