Our Feeds


Sunday, January 22, 2023

ShortTalk

கோட்டாவுக்கு மாதம் 10 லட்சங்களை செலவு செய்கிறதா அரசாங்கம் - மறுக்கிறார் கோட்டா!



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 19 வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதாக வெளியான செய்திகள் பொய்யானவை என அவரது தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.


கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எந்தவொரு வாகனத்தையும் தவறாக பயன்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ கார் தேசிய நிகழ்வுகளின் போது தவிர வேறு எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தப்படவில்லை.

ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வாகனங்கள் ஒதுக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினருக்கு வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரத்தியேக செயலாளர் சுதீஸ்வர பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போதும் தனது தனிப்பட்ட காரை மாத்திரமே பயன்படுத்துகின்றார்.

முன்னாள் ஜனாதிபதியின் உணவு மற்றும் பானங்களுக்காக அரசாங்கம் 950,000 ரூபாவை செலுத்துவதாக வெளியான செய்திகளும் பொய்யானவை என பிரத்தியேக செயலாளர் சுதீஸ்வர பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »