Our Feeds


Thursday, January 19, 2023

ShortTalk

கொழும்பில் 9 மணிநேரம் நீர் விநியோகம் தடை - பட்டியல் இணைப்பு.



கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை 9 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை-கல்கிசை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை-முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதி, இரத்மலானை மற்றும் இரத்மலானை மற்றும் கடுபெத்த ஆகிய பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை காலை 11 மணி முதல் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவித்துள்ளது.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »