Our Feeds


Saturday, January 21, 2023

ShortTalk

A/L பரீட்சை காலத்தில் இரவு 7 மணிக்கு பின்னர் மின்வெட்டு இல்லை!



கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்வெட்டை அமுல்படுத்தாமலிருக்க தீர்மானித்துள்ளதாக  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


பரீட்சைகள் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்றும் (ஜன.21) நாளையும் (ஜன.22) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »