Our Feeds


Tuesday, January 3, 2023

ShortNews

வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க அரசாங்கம் நடவடிக்கை



சுற்றுலா விசாவின் கீழ் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து இலங்கையர்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்தல் விடுத்துள்ளது.


இதேவேளை, சுற்றுலா விசாவின் கீழ் சட்டவிரோதமாக ஓமன் நாட்டுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காகச் சென்ற 18 பெண்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.



வேலை செய்யும் இடங்களை விட்டு ஓடிய பெண்கள் ஓமானின் தொழிலாளர் அமைச்சகத்தால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »