Our Feeds


Sunday, January 8, 2023

SHAHNI RAMEES

இன்று முதல் மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பம்...!

 

நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் இன்று (08) முதல் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளது.

போதிய நிலக்கரி கையிருப்பு மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக கடந்த மாதம் 23 ஆம் திகதி நுரைச்சோலை அனல்மின்நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் ஒன்றை செயலிழக்கச் செய்வதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.


தற்போது போதிய நிலக்கரி கையிருப்பு இருப்பதால் ஜெனரேட்டரை இயக்க முடிந்ததாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதுவரை தலா 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரியுடன் இரண்டு கப்பல்கள் தீவை வந்தடைந்துள்ளதுடன், அதில் ஒரு கப்பல் நிலக்கரி இருப்புகளை இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »