Our Feeds


Wednesday, January 4, 2023

ShortTalk

குருநாகல் பகுதியில் போலி தலதா மாளிகை - நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரி - மல்வத்து பீடங்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!


போலி தலதா மாளிகையை  நிர்மாணித்து ஸ்ரீ தலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டமை தொடர்பில் மல்வத்து அஸ்கிரி பீடங்களின் பீடாதிபதிகள் மற்றும் தலதா மாளிகையின் தியவதன நிலமே ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

குருணாகல், வதாகட வீதி, பொத்துஹெர பிரதேசத்தில் ஜானக சேனாதிபதி என்பவரால்  போலியான   தலதா  மாளிகை ஒன்று  நிர்மாணிக்கப்படுவதாக மல்வத்து-அஸ்கிரி பீடாதிபதிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன், ஏற்கனவே பல உள்ளூர் மற்றும் வெளியூர்  பக்தர்கள் போலி தலதா மாளிகைக்கு  தரிசனத்துக்காகச் சென்று  பணம் மற்றும் தங்க நகைகளை  நன்கொடையாக வழங்கி ஏமாந்துள்ளனர் என்றும்  ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட  முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »