குருணாகல், வதாகட வீதி, பொத்துஹெர பிரதேசத்தில் ஜானக சேனாதிபதி என்பவரால் போலியான தலதா மாளிகை ஒன்று நிர்மாணிக்கப்படுவதாக மல்வத்து-அஸ்கிரி பீடாதிபதிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன், ஏற்கனவே பல உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் போலி தலதா மாளிகைக்கு தரிசனத்துக்காகச் சென்று பணம் மற்றும் தங்க நகைகளை நன்கொடையாக வழங்கி ஏமாந்துள்ளனர் என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.