Our Feeds


Tuesday, January 3, 2023

ShortTalk

பொருளாதார நெருக்கடியினால் தாய் எடுத்த தற்கொலை முடிவு - ஒரு மகன் உயிரிழப்பு - நடந்தது என்ன?



தாயொருவர் தனது மகனையும் மகளையும் விஷம் குடிக்க வைத்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகன் உயிரிழந்துள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


லொலுவாகொட, தலஹேன பிரதேசத்தை சேர்ந்த ஏ.ஏ. பேஷன் சசிந்தா என்ற ஐந்து வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுக்கும் போது தாயும் விஷம் அருந்தியதாக நால்ல பொலிஸார் தெரிவித்தனர்.

தாயார் தற்போது கவலைக்கிடமான நிலையில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 8 வயதுடைய மகளும் ஆபத்தான நிலையில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் அதிக கடனில் இருந்ததாக விஷம் அருந்திய பெண்ணின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் நால்ல பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »